head

head

Sunday, December 29, 2013

யோக சித்தி

1.விண்ணும் மண்ணுந்தனி யாளும் - எங்கள் வீரை சத்தி நினதருளே - என்றன் கண்ணுங் கருத்துமெனக் கொண்டு - அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி - நான் பண்ணும் பூசனைகளெல்லாம் - வெறும் பாலை வனத்திலிட்ட நீரோ? - உனக் கெண்னுஞ் சிந்தை யென் நிலையோ - அறி வில்லா தகிலமளிப் பாயோ ? 2.நீயே சரணமென்று கூவி - என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி தாயே யெனக்கு மிக நிதியும் - அறந் தன்னைக் காக்குமொரு திறனும் - தரு வாயோ யென்று பணிந் தேத்திப் - பல வாறா நினது புகழ் பாடி - வாய் ஓயே னாவது துணராயோ ? - நின துண்மை தவறுவதோ ரழகோ ? 3.காளீ வளிய சாமுண்டி - ஓங் காரத் தலைவி யென்னி ராணி - பல நாளிங் கெனை யலைக்க லாமோ? - உள்ளம் நாடும் பொருளடைதற் கன்றோ - மலர்த் தாளில் விழுந்த பயங் கேட்டேன் - அது தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம் நீளி லுயிர் தரிக்க மாட்டேன் - கரு நீலி யென்னியல்பறி யாயோ?
Please Share it! :)
1.விண்ணும் மண்ணுந்தனி யாளும் - எங்கள் வீரை சத்தி நினதருளே - என்றன் கண்ணுங் கருத்துமெனக் கொண்டு - அன்பு கசிந்து கசிந்து கசிந்துருகி - நான் பண்ணும் பூசனைகளெல்லாம் - வெறும் பாலை வனத்திலிட்ட நீரோ? - உனக் கெண்னுஞ் சிந்தை யென் நிலையோ - அறி வில்லா தகிலமளிப் பாயோ ? 2.நீயே சரணமென்று கூவி - என்றன் நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி தாயே யெனக்கு மிக நிதியும் - அறந் தன்னைக் காக்குமொரு திறனும் - தரு வாயோ யென்று பணிந் தேத்திப் - பல வாறா நினது புகழ் பாடி - வாய் ஓயே னாவது துணராயோ ? - நின துண்மை தவறுவதோ ரழகோ ? 3.காளீ வளிய சாமுண்டி - ஓங் காரத் தலைவி யென்னி ராணி - பல நாளிங் கெனை யலைக்க லாமோ? - உள்ளம் நாடும் பொருளடைதற் கன்றோ - மலர்த் தாளில் விழுந்த பயங் கேட்டேன் - அது தாரா யெனிலுயிரைத் தீராய் - துன்பம் நீளி லுயிர் தரிக்க மாட்டேன் - கரு நீலி யென்னியல்பறி யாயோ?

No comments :

Post a Comment